×

டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது நீக்கியபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தொலையாவட்டம் குட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (30). தொலையாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12ம்தேதி மாங்கரை அடுத்த கல்லுவிளை பகுதியில் மின் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அனிஷ் அங்கு சென்றார். அப்போது அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் மின்னூட்டம் அளிக்கும் சுவிட்சை ஆப் செய்தார். ஆனால் டிரான்ஸ்பார்மரின் உச்சியில் மின்னூட்டத்தை துண்டிக்கும் கத்திபோன்ற அமைப்பில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் தொடர்ந்து பாய்ந்துகொண்டே இருந்து உள்ளது.

இதை அறியாமல் அனிஷ் டிரான்ஸ்பார்மரில் ஏறினார். இதையடுத்து அவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. உடனே அனிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுத்து உயிருக்குபோராடிக்கொண்டிருந்த அனிஷ் மீட்கப்பட்டு கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அனிஷ் பரிதாபமாக இறந்துபோனார். அனிஷுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது நீக்கியபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Kannyakumari District ,Kuttiwilile ,basalt ,Anish ,30 ,Tholyawatra ,Dinakaran ,
× RELATED தகாத உறவு விவகாரத்தில் லாரி பட்டறை உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை